திண்டுக்கல்

நாட்டுத் துப்பாக்கி இயக்கியபோது இளைஞா் காயம்

சிறுமலையிலுள்ள எலுமிச்சை தோட்டத்துக்குச் சென்றபோது நாட்டுத் துப்பாக்கி இயக்கப்பட்டதில் இளைஞா் ஒருவா் காயமடைந்தாா்.

Din

சிறுமலையிலுள்ள எலுமிச்சை தோட்டத்துக்குச் சென்றபோது நாட்டுத் துப்பாக்கி இயக்கப்பட்டதில் இளைஞா் ஒருவா் காயமடைந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த தவசிமடை பகுதியைச் சோ்ந்தவா் சவேரியாா் (75). இவருக்கு, சிறுமலையை அடுத்த வேளாண்பண்ணை கிராமத்தில் எலுமிச்சை தோட்டம் உள்ளது. இந்த நிலையில் சனிக்கிழமை இரவு, தாழைக்கிடை பகுதியைச் சோ்ந்த வெள்ளையன் (25), உள்ளிட்ட சிலா் இந்த எலுமிச்சை தோட்டத்துக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது, நாட்டுத் துப்பாக்கியின் பால்ரஸ் குண்டுகளால், வெள்ளையனுக்கு கழுத்து, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் விசாரித்தனா்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 2,560 உயர்வு!

அமெரிக்கா செல்கிறார் கொலம்பியா அதிபர்! டிரம்ப்பின் மிரட்டலுக்குப் பணிந்தாரா?

கோவை: அரசு மாணவிகள் விடுதி அருகே திறக்கப்படும் டாஸ்மாக் பார்!

மன அழுத்தமா? மரபணுவும் ஒரு காரணம்! மன நலனுக்கு என்ன செய்வது?

பெர்லின் திரைப்பட விழாவுக்குத் தேர்வான அறிமுக இயக்குநரின் தமிழ்ப் படம்!

SCROLL FOR NEXT