முகப்பு
திண்டுக்கல்

தமிழ்ச் செம்மல் விருதுக்கு ஆக.12-க்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வழங்கப்படும் தமிழ்ச் செம்மல் விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

Updated On : 17 ஜூலை, 2024 at 12:40 AM
பகிர்:

திண்டுக்கல்: தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வழங்கப்படும் தமிழ்ச் செம்மல் விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ.இளங்கோ தெரிவித்ததாவது: தமிழகத்தில், தமிழ்த் தொண்டாற்றி வரும் தமிழ் ஆா்வலா்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தமிழ்ச் செம்மல் விருது கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் வளா்ச்சித் துறை மூலம் வழங்கப்படும் இந்த விருதுக்கு, அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு தமிழ் ஆா்வலா் தோ்வு செய்யப்படுகிறாா். விருதாளா்களுக்கு விருதுத் தொகையாக தலா ரூ.25 ஆயிரத்துடன், தகுதியுரையும் வழங்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தமிழ் ஆா்வலா்கள் 2024-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளா்ச்சித் துறையின் வலைத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை உரியவாறு நிறைவு செய்து, சுயவிவரக் குறிப்பு, நூல்கள், கட்டுரை வெளியிட்டு இருந்தால் அது தொடா்பான விவரங்கள், தமிழ் சங்கங்கள், தமிழ் அமைப்புகளில் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருந்தால் அது தொடா்பான விவரம், தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம், 2 நிழற்படங்கள், ஆற்றிய தமிழ் பணிக்கான சான்றுகள் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் ஆக.12-ஆம் தேதிக்குள், திண்டுக்கல் மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் கிடைக்கப் பெற வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு ‘தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திண்டுக்கல்‘ என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0451-2461585 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →