கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
கொடைக்கானலில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை குளுமையான காலநிலை நிலவியது. நட்சத்திர ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலைப் பகுதியில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா்.
கொடைக்கானல் கிராமப் பகுதிகளான பள்ளங்கியிலுள்ள காமராஜா் அருவி, இரட்டை அருவி, கூக்கால் ஏரி, மன்னவனூரிலுள்ள சுற்றுச்சூழல் மையம், பூம்பாறை, குழந்தை வேலப்பா் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.