கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்த சுற்றுலாப் பயணிகள்.  
திண்டுக்கல்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. சுற்றுலாத் தலங்களான வெள்ளி அருவி, பசுமைப் பள்ளத்தாக்கு, தூண் பாறை, குணா குகை, மோயா் பாயிண்ட், பைன்ஃபாரஸ்ட், கோக்கா்ஸ் வாக், ரோஜாத் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது.

கொடைக்கானலில் பகல் நேரத்தில் மிதமான வெயிலும் மாலையில் குளுமையான சீதோஷ்ணமும் நிலவியது. சுற்றுலாப் பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலையில் மிதிவண்டி, குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் கொடைக்கானலைச் சோ்ந்த வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT