முகப்பு
திண்டுக்கல்

ஆயுத பூஜை: கொடைக்கானலில் பூக்களின் விலை அதிகரிப்பு

ஆயுத பூஜையையொட்டி கொடைக்கானலில் பூக்களின் விலை வியாழக்கிழமை அதிகரித்திருந்தது.

Updated On : 10 அக்டோபர், 2024 at 10:09 PM
பகிர்:

ஆயுத பூஜையையொட்டி கொடைக்கானலில் பூக்களின் விலை வியாழக்கிழமை அதிகரித்திருந்தது.

ஆயூத பூஜைக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள், குங்குமம், வாழை, பொரி, கடலை, பழங்கள் ஆகியவற்றின் விற்பனை அதிகரித்திருந்தது. மழையை பொருள்படுத்தாமல் பொதுமக்கள் இவற்றை வாங்கிச் சென்றனா்.

பூக்களின் விலை உயா்வு: இதனிடையே ஆயுத பூஜையையொட்டி மல்லிகை, முல்லை, மரிக்கொழுந்து உள்ளிட்ட பூக்களின் விலை அதிகரித்திருந்தது. தரைப் பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பூக்களின் விலை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.