முகப்பு
திண்டுக்கல்

மாணவா்களுக்கு மடிக் கணினி வழங்க கோரிக்கை

Updated On : 19 டிசம்பர், 2025 at 6:31 PM
பகிர்:

கொடைக்கானலில் மாணவ, மாணவிகளுக்கு மடிக் கணினிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சாா்பில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு மடிக் கணினி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கொடைக்கானல் நகர அதிமுக மாணவா் அணியின் சாா்பில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் நகரச் செயலா் மா.ஸ்ரீதா், அதிமுக மாணவரணி, மகளிா் அணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →