திண்டுக்கல்

ரயிலில் 5.7 கிலோ கஞ்சா மீட்பு

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கோவையிலிருந்து வந்த விரைவு ரயிலில் 5.7 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் மீட்டனா்.

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கோவையிலிருந்து வந்த விரைவு ரயிலில் 5.7 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

கோவையிலிருந்து நாகா்கோவில் செல்லும் விரைவு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.35-க்கு வந்தது. இந்த ரயிலில், திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, ஒரு பெட்டியிலிருந்த பைகளில் 5.7 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. அதனை மீட்ட போலீஸாா், திண்டுக்கல் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT