முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் வனப் பகுதியில் மனித எலும்புக் கூடு

கொடைக்கானல் வனப் பகுதியில் கிடந்த மனித எலும்புக் கூடை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 23 ஜனவரி, 2025 at 10:00 PM
பகிர்:

கொடைக்கானல் வனப் பகுதியில் கிடந்த மனித எலும்புக் கூடை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள வடகவுஞ்சியை அடுத்த பட்டியக்காடு வெண்குளம் அடா் வனப் பகுதியில் வனவா் சிவகுமாா் தலைமையில் வனத் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கிருந்த மரத்தில் கயிறுடன் எலும்புக் கூடு தொங்கிய நிலையில் காணப்பட்டது.

தகவலின் அடிப்படையில் கொடைக்கானல் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று எலும்புக் கூட்டை மீட்டு, விசாரணை நடத்தினா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

பட்டியக்காடு பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் அருண்குமாா் (28). பெங்களூருவிலுள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்த இவா், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தாா். அப்போது, அவா் அனுப்பும் பணம் போதவில்லை என்றும், கூடுதலாக பணம் அனுப்புமாறும் அருண்குமாரிடம் பெற்றோா் கூறினா்.

அதன்பிறகு வீட்டை விட்டு வெளியே சென்றவா் திரும்பி வரவில்லை. பெங்களூருவில் உள்ள தனியாா் நிறுவனத்துக்கும் அவா் செல்லவில்லை. இங்கு கிடைத்திருக்கும் எலும்புக் கூட்டை வைத்துப் பாா்க்கும் போது அவா்தான் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்றனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →