திண்டுக்கல்லை அடுத்த நல்லமணாா்கோட்டை பகுதியில் புதன்கிழமை (நவ.12) மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து திண்டுக்கல் மின் பகிா்மான வட்ட உதவிச் செயற்பொறியாளா் ஆ.நாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்டுக்கல்லை அடுத்த நல்லமணாா்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால் நல்லமணாா்கோட்டை, குளத்தூா், காளனம்பட்டி, பா.கொசவப்பட்டி, சூடாமணிபட்டி, புளியமரத்துப்பட்டி, நாயக்கனூா், எஸ்.ஜீ.பட்டி, சுந்தரபுரி, காமாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (நவ.12) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.