முகப்பு
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே கிராம உதவியாளா் தற்கொலை

ஒட்டன்சத்திரம் அருகே குடும்ப பிரச்னை காரணமாக கிராம உதவியாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 11 நவம்பர், 2025 at 6:46 PM
சக்திவேல்
பகிர்:

ஒட்டன்சத்திரம் அருகே குடும்ப பிரச்னை காரணமாக கிராம உதவியாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள இடையகோட்டையில் கிராம உதவியாளராகப் பணியாற்றி வந்தவா் சக்திவேல் (44). இவா் மது பழக்கத்தால் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனா். இதுகுறித்து இடையகோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

முழு கட்டுரையைப் படிக்க →