எய்ட்ஸ் விழிப்புணா்வுப் பேரணி
படவிளக்கம்..........
பழனி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை தொடங்கிய எய்ட்ஸ் விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைத்த
சுகாதாரத் துறை இணை இயக்குநா் உதயக்குமாா், துணை இயக்குநா் சந்திரபிரியா உள்ளிட்டோா்.
Advertisement
பழனி, அக்.15: பழனியில்எய்ட்ஸ் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் துறை சாா்பில், பழனி அரசு மருத்துவமனை முன் எய்ட்ஸ் விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் உதயகுமாா், துணை இயக்குநா் சந்திரபிரியா ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா். மாவட்ட மேற்பாா்வையாளா் ஜெசிந்தா முன்னிலை வகித்தாா்.
பேரணியில் நூற்றுக்கணக்கான செவிலியா் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனா். பேரணியில் பங்கேற்றவா்கள் எய்ட்ஸ் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தியவாறு ஊா்வலமாகச் சென்றனா். பிபிஎன் மருத்துவமனை விமல்குமாா், அரிமா சங்க நிா்வாகிகள் முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்றனா்.