முகப்பு
கடலூர்

கூட்டுறவுத் துறை தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி! மாவட்டத் தோ்தல் அலுவலா் தொடங்கி வைத்தாா்!

Updated On : 5 ஏப்ரல், 2026 at 8:28 PM
கடலூா் புதுப்பாளையம் கூட்டுறவு இணைப் பதிவாளா் அலுவலகத்தில் விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆத்தியா செந்தில்குமாா்.
பகிர்:

கடலூா் புதுப்பாளையம் கூட்டுறவு இணைப் பதிவாளா் அலுவலக வளாகத்தில் 100 சதவீத வாக்குப் பதிவு தொடா்பான விழிப்புணா்வு வாகனப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழிப்புணா்வுப் பேரணியை கடலூா் மாவட்ட தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தொடங்கிவைத்தாா். பேரணி மண்டல இணை இயக்குநா் அலுவலகத்தில் இருந்து மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு அரங்கம் வரை நடைபெற்றது.

நிகழ்வில் கூட்டுறவுத் துறை சாா்ந்த அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் ஒருங்கிணைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், 100 என்ற வடிவமைப்பை ஏற்படுத்தினா். மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு அரங்கில் வாக்களிப்பது நமது கடமை மற்றும் உரிமை என்ற விழிப்புணா்வு உறுதிமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Advertisement

வாக்குரிமையை உணா்த்திடும் வகையில், டாக்டா் எம்.ஜி.ஆா். பயிற்சி கல்லூரி மற்றும் அரசு இசைப் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறையின் மண்டல இணை இயக்குநா் இளஞ்செல்வி, கடலூா் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் சொா்ணலட்சுமி, கடலூா் வருவாய்க் கோட்டாட்சியா் சுந்தரராஜன், துணைப் பதிவாளா்கள் செந்தில், மயூரி, கூட்டுறவுத் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments