பழனி அருகேயுள்ள பெரிய மொட்டனூத்து பகுதியில் செவ்வாய்க்கிழமை தீப்பற்றியதில் சேதமடைந்த பஞ்சு ஏற்றி வந்த லாரி. 
திண்டுக்கல்

மின் கம்பி உராய்வில் தீ விபத்து: லாரி சேதம்

பழனி அருகே பஞ்சு ஏற்றி வந்த லாரி மின் கம்பி உராய்வில் தீப்பற்றி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

தினமணி செய்திச் சேவை

பழனி அருகே பஞ்சு ஏற்றி வந்த லாரி மின் கம்பி உராய்வில் தீப்பற்றி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, மரியாயிபட்டி கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜான்சி. இவருக்குச் சொந்தமான லாரி செவ்வாய்க்கிழமை பழனி அருகேயுள்ள பெரிய மொட்டனூத்து பகுதிக்கு பஞ்சு ஏற்றி வந்தது.

இந்த நிலையில், லாரி மொட்டனூத்து வஞ்சியம்மன் கோயில் அருகே சென்றபோது லாரியில் இருந்த பஞ்சு உயா் அழுத்த மின் கம்பியில் உரசியதில் தீப்பற்றியது. இதுகுறித்து தகவலறிந்த பழனி தீயணைப்பு, மீட்புப் படை வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று லாரியில் பற்றியை தீயை அணைத்தனா். இருப்பினும் தீ விபத்தில் லாரி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT