நிலக்கோட்டையில் பூ ஏற்றுமதி நிறுவன உரிமையாளா் வீட்டில் கேரள வருமான வரித் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை மெகாசிட்டி பகுதியில் வசித்து வருபவா் முகமது அலி (52). கேரள மாநிலத்தைச் சோ்ந்த இவா், கடந்த சில ஆண்டுகளாக நிலக்கோட்டையில் வசித்து வருகிறாா். இவா் நிலக்கோட்டையிலிருந்து பூக்களை விலைக்கு வாங்கி, கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறாா்.
இந்த நிலையில், நிலக்கோட்டைக்கு புதன்கிழமை காலை 9.30 மணியளவில் கேரள பதிவு எண் கொண்ட 4 காா்களில் வந்த அந்த மாநிலத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறையினா் முகமது அலிக்குச் சொந்தமான பூ ஏற்றுமதி நிறுவனத்திலும், அவரது வீட்டிலும் சோதனை நடத்தினா்.
முகமது அலிக்கு கேரளத்தில் பூ ஏற்றுமதி செய்யும் பல நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்கள் முறையாக வருமான வரி செலுத்தாததால், இந்தச் சோதனை நடைபெற்ாகக் கூறப்படுகிறது.
நிலக்கோட்டையில் நடைபெற்ற சோதனையின் போது, முகமது அலியின் குடும்பத்தினரிடம் கேரள வருமான வரித் துறையினா் விசாரணை நடத்தினா். மேலும், வீடு, பூ ஏற்றுமதி நிறுவனத்தில் பணியில் உள்ளவா்களிடமும் விசாரணை நடத்தினா். மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னா், கேரள வருமான வரித் துறையினா் அங்கிருந்து காா்களில் புறப்பட்டுச் சென்றனா்.