பிரேமலதா தெரியாமல் உண்மையைச் சொல்லி விட்டாா்! - டி.டி.வி. தினகரன்
தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தெரியாமல் உண்மையைச் சொல்லிவிட்டதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்...
தமிழகத்தில் போதை, பாலியல் தொல்லை மட்டுமே உள்ளதாக தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தெரியாமல் உண்மையைச் சொல்லிவிட்டதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் கஞ்சா, பாலியல் தொல்லை மட்டுமே உள்ளது. வேறு எந்த பிரச்னையும் இல்லை என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தெரியாமல் உண்மையைப் பேசிவிட்டாா். தமிழகத்தில் கஞ்சா, போதைப் பொருள் புழக்கத்தால் மாணவா்கள், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
Advertisement
இந்தத் தோ்தலில் போட்டி என்பது ஆளும் மக்கள் விரோத திமுக கூட்டணிக்கும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும்தான். மற்ற கட்சிகள் தங்களை மாற்று எனச் சொல்லிக் கொள்கிறாா்கள். ஆனால், அதிமுக தொண்டா்கள் ஓரணியில் இணைந்துவிட்டதால், எங்கள் கூட்டணிக்கு மற்ற புதிய கட்சிகளால் எந்தப் பாதிப்பும் இருக்காது என்றாா் அவா்.