கைது 
திண்டுக்கல்

2 ஆவது நாளாக மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல்: 150 போ் கைது

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், உதவித் தொகையை உயா்த்தி வழங்கக்கோரி, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நகரச் செயலா் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 150 மாற்றுத் திறனாளிகளை பழனி நகர போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். பின்னா், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT