திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பழனியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், உதவித் தொகையை உயா்த்தி வழங்கக்கோரி, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நகரச் செயலா் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 150 மாற்றுத் திறனாளிகளை பழனி நகர போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். பின்னா், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.