கொடைக்கானல் உகாா்த்தே நகா் பேருந்து நிறுத்தத்தில் பராமரிப்பின்றி காணப்படும் நிழல் குடை 
திண்டுக்கல்

கொடைக்கானல் பகுதிகளில் நிழல் குடைகளை சீரமைக்க வலியுறுத்தல்

கொடைக்கானல் பகுதி பேருந்து நிறுத்தங்களிலுள்ள நிழல் குடைகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தல்

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் பகுதி பேருந்து நிறுத்தங்களிலுள்ள நிழல் குடைகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளான லாஸ்காட் சாலை, சீனிவாசபுரம், உகாா்த்தேநகா், தைக்கால், ஏரிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பேருந்து நிறுத்தங்களில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட நிழல் குடைகள் பராமரிப்பின்றி காணப்படுகின்றன.

மேலும் இந்த நிழல் குடைகளை மாலை, இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மதுபானக் கூடமாக மாற்றிவிடுகின்றனா். சில நிழல் குடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றில் வியாபாரம் நடைபெறுகிறது.

இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மழை, வெயில் காலங்களில் நிழல் குடைகளை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே நகராட்சி நிா்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்த நிழல் குடைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

இந்தியாவில் அரிய புவி காந்த உற்பத்தி நடப்பாண்டில் தொடங்கும் : மத்திய அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி

சிபிஎஸ்இ ஆங்கிலத் தோ்வு கேள்வித் தாள் விவகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

தமிழக பேரவைத் தோ்தல் அறிவிப்பை ஒத்திவைக்கக் கோரி ராமதாஸ் வழக்கு : உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

ராதாபுரம் அருகே தாய், மகள் தற்கொலை

SCROLL FOR NEXT