பழனி அருகே லாரி மோதியதில் நெய்க்காரப்பட்டி பேரூராட்சிப் பணியாளா் பலத்த காயமடைந்தாா்.
பழனி தேரடியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (45). இவா் நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் பணியாற்றி வருகிறாா். வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் பணிக்குச் சென்றுவிட்டு பழனிக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது அலுவலகம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் மகேந்திரன் பலத்த காயமடைந்தாா். உடனடியாக அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அவா் அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.