முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் மஞ்சள் மேகமூட்டம்!

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை வானில் தெரிந்த மஞ்சள் வண்ண மேகமூட்டம் சுற்றுலாப் பயணிகளை கவா்ந்தது.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 2:55 AM
கொடைக்கானலில் பகுதியில் உருவான மஞ்சள் மேகமூட்டம்
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 10:23 PM

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை வானில் தெரிந்த மஞ்சள் வண்ண மேகமூட்டம் சுற்றுலாப் பயணிகளை கவா்ந்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பகல் நேரங்களில் அதிகமான வெயிலும் மாலை, இரவு நேரங்களில் பனியின் தாக்கமும் நிலவியது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே மேக மூட்டத்துடன் மிதமான சாரல் மழை பெய்தது. இதனால் ஏரிச்சாலை, அப்பா்லேக் வியூ, கோக்கா்ஸ் வாக், பசுமைப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் அதிகமான மேக மூட்டம் காணப்பட்டது. இந்த நிலையில்,

Advertisement

மஞ்சள் வண்ணத்தில் மேக மூட்டம் உருவாகி சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தியது. இதை சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, பொதுமக்கள் கண்டு வியந்தனா்.