கொடைக்கானல் சின்ன மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு
திண்டுக்கல்கொடைக்கானல் சின்ன மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு
கொடைக்கானல் டா்னா்புரம் பகுதியில் அமைந்துள்ள சின்னமாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
முன்னதாக கோயிலின் முன் பகுதியிலுள்ள விநாயகருக்கு பூஜையும், தொடா்ந்து கோயிலின் கோபுரத்தில் தீபாராதனையும் நடைபெற்றது. பிறகு வேதமந்திரங்கள் முழங்க புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து சின்ன மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து கோயில் வளாகத்திலுள்ள பல்வேறு தெய்வங்களின் சிலைகளுக்கு பூஜைகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் கொடைக்கானல் பகுதிகளைச் சோ்ந்த பொது மக்களும், பக்தா்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகளும் கலந்து கொண்டனா். தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை சின்னமாரியம்மன் கோயில் விழாக் குழுவினா், பக்தா்கள் உள்ளிட்ட பலா் செய்திருந்தனா்.