முகப்பு
திண்டுக்கல்

ரூ.14 லட்சத்துக்கான நலத்திட்ட உதவிகள் அளிப்பு

Updated On : 12 மே 2026, 12:08 am IST
மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களை வழங்கிய ஆட்சியா் செ. சரவணன்.
பகிர்:

கடனுதவிகள், நலத்திட்டம் என ரூ.14 லட்சத்துக்கான உதவிகளை பயனாளிகளுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் திங்கள்கிழமை வழங்கினாா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது, பொதுமக்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகளுக்காக 182 மனுக்கள் அளிக்கப்பட்டன.

இந்த கூட்டத்தின்போது தங்கச்சியம்மாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ. 1.37 லட்சம் மதிப்பிலான கடனுதவி, காப்பிலியப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் 13 பயனாளிகளுக்கு ரூ.6.30 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை ஆட்சியா் செ. சரவணன் வழங்கினாா்.

Advertisement

இதைத் தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1.08 லட்சம் மதிப்பில் மொத்தம் ரூ.6.48 லட்சத்துக்கான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களையும், 5 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் வழங்கினாா்.