மதுரையில் சிகிச்சைக்கு பணமில்லாததால் மனமுடைந்த தொழிலாளி தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் வெங்கடேஸ்வரன்(31). செல்லிடப்பேசி தொடர்பு கோபுரம் அமைக்கும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், வெங்கடேஸ்வரனுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். அவரது சிகிச்சைக்கு பணம் அதிகம் செலவாகி உள்ளது. மேலும் சிகிச்சைக்குத் தேவையான பணத்தையும் புரட்ட முடியாமல் வெங்கடேஸ்வரன் அவதி அடைந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த வெங்கடேஸ்வரன் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் தொடர்பாக அவரது தாய் சாந்தி அளித்தப் புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.