கொட்டாம்பட்டி பேருந்து நிலையம் அருகே தனியார் வணிக வளாகப் பகுதியில் திங்கள்கிழமை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமாக கிடந்தார்.
அவர் யார் என அடையாளம் தெரியவில்லை. கொட்டாம்பட்டி போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி மேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் யார் என அவர்கள் விசாரித்து வருகின்றனர்.