மதுரை

மண்டல அலுவலகங்களில் இன்று குறைதீர் முகாம்கள்

DIN

மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (மேற்கு), மண்டலம் 2 (வடக்கு) ஆகியவற்றில் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்கள் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
 இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மதுரை மாநகராட்சியில் தினமும் முகநூல், தகவல் அழைப்பு மையம் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களின் குறைகள் பெறப்பட்டு அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.   மண்டல அலுவலகங்களில் வாரந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தியும் மனுக்கள் பெறப்படுகின்றன. செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) காலை மண்டலம் 1 அலுவலகத்திலும், மாலையில் மண்டலம் 2 அலுவலகத்திலும் மனுக்களை மாநகராட்சி ஆணையர் நேரில் பெறுகிறார். பொதுமக்கள் தங்களது கோரிக்கையை மனுவாக எழுதி அளிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT