மதுரை திருப்பாலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 26) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக வடக்கு பெருநகர் வட்டச் செயற்பொறியாளர் ம. சண்முகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: வெள்ளிக்கிழமை (மே 26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, திருப்பாலை மற்றும் புதூர் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
எனவே, திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா, வள்ளுவர் நகர், விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர், முல்லை நகர், சிவக்காடு, குலமங்கலம், கிருஷ்ணாபுரம் காலனி, பீபீகுளம், மருதுபாண்டியன் நகர், கண்ணனேந்தல், சூரியா நகர், ஊமச்சிகுளம்.
அலங்காநல்லூர், தேசிய சர்க்கரை ஆலை, வலையபட்டி, கடச்சனேந்தல், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, வாவிடமருதூர், சேத்தமங்கலம், மேட்டுப்பட்டி, மண்மலைமேடு, மூன்றுமாவடி, மகாலட்சுமி நகர், பூதக்குடி, சிக்கந்தர்சாவடி, பாசிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.