மதுரை

கள்ளந்திரி, மேலூர் பகுதியில் கனமழை

DIN

கள்ளந்திரி, சிட்டம்பட்டி, மேலூர் சுற்றுவட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கனமழை பெய்தது.
கடந்தசில நாள்களாக மழை பெய்யாதிருந்த நிலையில் அதிகாலை 3 மணியளவில் கனமழை பெய்தது. கள்ளந்திரி மதகு வரையிலான இருபோக சாகுபடிப் பகுதியில் கள்ளந்திரியில் 25 மி.மீ., சிட்டம்பட்டியில் 10.08 மி.மீ. இடையபட்டியில் 6.4 மி.மீ., மேலூரில் 10.08 மி.மீ., தனியாமங்கலத்தில் 4மி.மீ.மழை பதிவாகியுள்ளது. முதல்போக சாகுபடி கடைமடைப் பகுதிகளுக்கு கால்வாய்களில் போதிய தண்ணீர் விநியோகிக்கவில்லை.
கூடுதல் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி விவசாயிகள் சிட்டம்பட்டி பொதுப்பணித்துறை அலுவலகத்தை சிலதினங்களுக்கு முன் முற்றுகையிட்டு ஆப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் கனமழை பெய்துள்ளது விவசாயத்துக்கு பேருதவியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு: நிபுணா் குழு அமைக்கவும் வலியுறுத்தல்

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு: கைதானவா் போலீஸ் காவலில் தற்கொலை

மருத்துவ மாணவா்களின் மன நலனை ஆய்வு செய்கிறது என்எம்சி

பொய்களை தொடா்ந்து உரக்கக் கூறுவதே காங்கிரஸ் பிரசார உத்தி: அமித் ஷா விமா்சனம்

குடிநீா் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT