மதுரை

டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 5 பேர் சாவு

DIN

மதுரையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சைப்பெற்று வந்த 5 பேர் செவ்வாய்க்கிழமை இறந்தனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கல்வேலிப்பட்டியைச் சேர்ந்தவர் வர்ஷினி(19). மதுரையில் உள்ள கல்லூரியில் படித்து இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வர்ஷினி, அலங்காநல்லூர் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சைப்பெற்று வந்தநிலையில், காய்ச்சல் குணமாகாததால் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனையில் அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தார்.
இதே போல டெங்குவால் பாதிக்கப்பட்ட மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த மாயாண்டி (51), சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த ஜாபர் அலி (53), மதுரை மாவட்டம் பேரையூர், கோடங்கி நாயக்கன்பட்டியை சேர்ந்த ராணி அம்மாள் (52) ஆகியோரும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். அங்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கருப்பட்டியைச் சேர்ந்த வேளாங்கன்னி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குசிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT