மதுரை

பேருந்து நடத்துநர் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

DIN

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே அரசுப்பேருந்து நடத்துநர் வீட்டில் பூட்டை உடைத்து 4 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் திருடப்பட்டுள்ளது.
   சமயநல்லூர் அருகே உள்ள பரவை சரவணாநகர் விரிவாக்கம் ஆவுடையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன்(வயது 57).  அரசுப் பேருந்து நடத்துநராக பணிபுரிந்து வருகிறார்.
 இவர் அக்.2-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மதுரையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார்.  இதையடுத்து வியாழக்கிழமை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உள்ளே சென்றுபார்த்தபோது,  பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள், ரூ.15ஆயிரம் ஆகியவை திருடப்பட்டிருந்தன. இதுதொடர்பாக ஜெயராமன் அளித்தப் புகாரின்பேரில் சமயநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT