மதுரை

மீனாட்சியம்மன் கோயிலில் பெண்ணிடம் 6 பவுன் நகை திருட்டு

DIN

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பெண்ணிடம் 6 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.   
  மதுரை பெத்தானியாபுரம் சாமிக்கண்ணு தெருவைச் சேர்ந்த முத்து மனைவி முருகேஸ்வரி (33). மீனாட்சியம்மன் கோயிலுக்கு புதன்கிழமை சென்ற முருகேஸ்வரி அங்கு சித்திரை திருவிழா கொடியேற்றத்தை தரிசனம் செய்துள்ளார். அப்போது அங்கு கூட்ட நெரிசலை பயன்படுத்தி முருகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றனர். தரிசனம் முடிந்ததும் கழுத்தில் இருந்த நகை திருடுபோனதை அறிந்த முருகேஸ்வரி சம்பவம் தொடர்பாக கோயில் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT