முகப்பு
மதுரை

செல்லிடப்பேசி தொலைந்ததால் விஷம் குடித்து இளைஞர் சாவு

செல்லிடப்பேசி தொலைந்த துக்கம் தாளாமல் இளைஞர் விஷமருந்தி உயிரிழந்தார். 

மதுரை

செல்லிடப்பேசி தொலைந்ததால் விஷம் குடித்து இளைஞர் சாவு

செல்லிடப்பேசி தொலைந்த துக்கம் தாளாமல் இளைஞர் விஷமருந்தி உயிரிழந்தார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

செல்லிடப்பேசி தொலைந்த துக்கம் தாளாமல் இளைஞர் விஷமருந்தி உயிரிழந்தார். 
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் சதன் என்கிற பாரதி (18). மதுரை மாவட்டம் ஊமச்சிகுளத்தில் உள்ள போர்வெல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், சமீபத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புதிய செல்லிடப்பேசி வாங்கியுள்ளார். ஆனால், சில நாள்களுக்கு முன் அதை தொலைத்துவிட்டாராம். 
இதனால், பெற்றோர் பாரதியை திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர், தான் பணிபுரியும் இடத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து வெள்ளைச்சாமி அளித்த புகாரின்பேரில், ஊமச்சிகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →