மதுரை காமராஜர் பல்கலைக்கழக மொழியியல் துறை சார்பில், அத்துறையின் முன்னாள் மாணவரும், தற்போதைய தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான கோ.பாலசுப்ரமணியனுக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு பேராசிரியர் ஏ.ஆதித்தன் தலைமை வகித்தார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ம.திருமலை சிறப்புரையாற்றினார். முன்னாள் துறைத்தலைவர் மணிவேல் வாழ்த்தி பேசினார். துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணியனுக்கு பேராசிரியர் குமாரசாமி நினைவுப்பரிசு வழங்கினார்.