மதுரை

பேருந்தில் 27 பவுன் நகை திருட்டு

தினமணி

மதுரையில் பேருந்தில் பயணம் செய்த முதியவரிடம் 27 பவுன் நகை அடங்கிய பையை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
   திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ்(75). இவரது மனைவி மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரைப் பார்ப்பதற்காக கரிமேடு பகுதியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு பால்ராஜ் திங்கள்கிழமை வந்துள்ளார். பின்னர் மனைவி அணிந்திருந்த 27 பவுன் நகை மற்றும் தன்னிடம் இருந்த ரூ.4 ஆயிரம் ஆகியவற்றை பையில் வைத்துக்கொண்டு கரிமேடு பகுதியில் இருந்து பேருந்தில் ஏறியுள்ளார். 
பேருந்தில் ஏறிய சிறிது நேரத்தில் அவர் வைத்திருந்த பை திருடுபோனது தெரியவந்தது. இதுதொடர்பாக பால்ராஜ் அளித்தப் புகாரின் பேரில் கரிமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT