உசிலம்பட்டியில் 285 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 285 பேருக்கு ரூ.62.38 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 285 பேருக்கு ரூ.62.38 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
இவ்விழா மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் தலைமையில், அதிமுக மாவட்ட செயலர் ராஜன் செல்லப்பா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நீதிபதி, பெரிய புள்ளான், எஸ்.எஸ்.சரவணன், ஏ.கே.போஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. உசிலம்பட்டி கோட்டாட்சியர் சுகன்யா வாழ்த்துரை வழங்கினார். இதையடுத்து சமூக பாதுகாப்புத் திட்ட உதவித்தொகை 121 பேருக்கும், நலிந்தோர் உதவித் தொகை 27 பேருக்கும், இலவச வீட்டு மனைப் பட்டா 94 பேருக்கும், சாலை விபத்து நிவாரணம் 3 பேருக்கும், தையல் இயந்திரம் 2பேருக்கும் என மொத்தம் 285 பேருக்கு ரூ.62.38 லட்ச மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன், துணை வட்டாட்சியர் எல்.ஆர். ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.