மதுரை

உசிலம்பட்டி கல்லூரியில் பொங்கல் விழா

DIN

உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.
கல்லூரி துணை முதல்வர் முனைவர் ஜோசப் செல்வராஜ் வரவேற்றார். முதல்வர் பேசில் சேவியர் தலைமையேற்று விழாவை தொடங்கி வைத்தார். கல்லூரியில் அனைத்து துறையினரும் தனித்தனியாக பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். பேராசிரியர்கள் மாணவர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையில் வந்து விழாவினை சிறப்பித்தனர். 
அதைத் தொடர்ந்து அலங்கார மாட்டு வண்டிகளின் அணிவகுப்பு, பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், இளவட்டக்கல் தூக்குதல், தப்பாட்டம், ஒயிலாட்டம் நாட்டுப்புற நடனம் உள்பட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரி அதிபர் அமல் குழந்தைசாமி, செயலர் மணிவளவன் மற்றும் இணை முதல்வர் மைக்கேல் ஜான், பீட்டர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் பொருளாதாரத் துறை தலைவர் முரளி நன்றி கூறினார்.
இதேபோல் உசிலம்பட்டியை அடுத்த முத்துபாண்டிபட்டியில் உள்ள ஜெயசீலன் மெட்ரிக் பள்ளியில் வெள்ளிக்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

SCROLL FOR NEXT