மதுரை

மதுரை அருகே இளைஞரை கத்தியால் குத்தி பணம் பறிப்பு

தினமணி

மதுரை அருகே வியாழக்கிழமை இரவு இளைஞரை கத்தியால் குத்தி, அவரிடம் இருந்த ரூ. 57 ஆயிரத்தை 3 பேர் கும்பல் பறித்துச் சென்றது.
   மதுரையை அடுத்த ஊமச்சிகுளம் அருகே  உள்ள வீரபாண்டியைச் சேர்ந்தவர் சரத்குமார் (34) . இவர் பாத்திமா கல்லூரி பகுதியில்  இருசக்கர வாகனங்களுக்கு நிதியுதவி அளிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
   இந்நிலையில்,  கடன் பெற்றவர்களிடம் தவணைத் தொகையை வசூலித்த சரத்குமார் வியாழக்கிழமை இரவு  இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத்  திரும்பிக் கொண்டிருந்தார்.
 அய்யனார்புரம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரை வழிமறித்து கத்தியால் குத்தி,  அவரிடம் இருந்த ரூ. 57 ஆயிரத்தைப் பறித்துச் சென்றனர்.  இதுகுறித்து ஊமச்சிகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகொண்டான் லாரல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘க்யூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு -மே15 முதல் 18-ஆம் தேதிவரை நடக்கிறது

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT