பெண் ஊழியரிடம் 3 பவுன் நகை பறிப்பு
திருமங்கலத்தை அடுத்த கப்பலூரில் செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் மூன்றரை சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
திருமங்கலத்தை அடுத்த கப்பலூரில் செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் மூன்றரை சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
திருமங்கலம் ஜவஹர் நகரைச் சேர்ந்த ராஜேஷ் மனைவி பேச்சியம்மாள் (40). இவர் கப்பலூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பேச்சியம்மாள் செவ்வாய்க்கிழமை இரவு பணிமுடிந்து மகன் வெற்றிவேலுடன் இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் நோக்கி சென்றுள்ளார்.
கப்பலூர் பாலம் அருகே சென்றபோது, பின்பக்கமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், பேச்சியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை சவரன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்தப் புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.