மேலூர் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
தேர்வுக்கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து மேலூர் அரசு கலை க்கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்தனர்.
தேர்வுக்கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து மேலூர் அரசு கலை க்கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்தனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை 20 சதம் உயர்த்தி அறிவித்துள்ளது.
இதனைக் கைவிடுமாறு வலியுறுத்தி அனைத்து மாணவர்களும் வகுப்புக்களை புறக்கணித்தனர்.
இதனால் கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.