முகப்பு
மதுரை

நடிகர் எஸ்.வி.சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி தலைமைக்கு பரிந்துரை: தமிழிசை சௌந்தரராஜன்

நடிகர் எஸ்.வி.சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

Updated On : 14 மே, 2018 at 5:38 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:32 PM

நடிகர் எஸ்.வி.சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் வந்திருக்கும் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக வந்துள்ளன. மக்கள் காங்கிரஸ் கட்சியை நம்பவில்லை. எனவே கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும். அமைச்சர்கள், அரசியல்வாதிகள் கருத்து கூறும்போது ஒரு தரப்பினரையோ அல்லது சமூகத்தையோ, பெண்களையோ அவமரியாதையாக பேசக் கூடாது. தமிழகத்தில் மணல் திருட்டை தடுக்க தமிழக அரசு தனிகவனம் செலுத்த வேண்டும்.
அத்துடன் மணல் திருட்டை தடுக்கச் சென்று கொலை செய்யப்பட்ட காவலர் ஜெகதீஸ்துரை குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்புத் தொகையும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
நடிகர் எஸ்.வி.சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. என்ன நடவடிக்கை என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.