நூல் வெளியீட்டு விழா
ஓய்வுபெற்ற மதுரை மாவட்ட நீதிபதி இரா.பொன்னுச்சாமி எழுதிய நினைவுகள்' நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஓய்வுபெற்ற மதுரை மாவட்ட நீதிபதி இரா.பொன்னுச்சாமி எழுதிய நினைவுகள்' நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மணியம்மை மழலையர் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பள்ளித் தாளாளர் பி.வரதராஜன் தலைமை வகித்தார். பேராசிரியர் கந்தசாமி வரவேற்றார்.
சார்பு நீதிபதி டி.பன்னீர்செல்வம் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
மூத்த வழக்குரைஞர் டி.கே.கோபாலன், ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் செல்வின் தங்கத்துரை, யாதவர் கல்லூரி தமிழ் உயராய்வு மைய முன்னாள் தலைவர் இ.கி.ராமசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னாள் நீதிபதி இரா.பொன்னுச்சாமி நிறைவுரையாற்றினார்.