முகப்பு
மதுரை

டெங்கு: 6 வீடுகளுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம்

மதுரையில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுப் புழு உற்பத்தி கண்டறியப்பட்ட 6 வீடுகளுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 13 நவம்பர், 2018 at 5:03 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:47 PM


மதுரையில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுப் புழு உற்பத்தி கண்டறியப்பட்ட 6 வீடுகளுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சி 35-ஆவது வார்டு ராமராயர் மண்டபம் தெரு, பனகல் 2 ஆவது தெரு, மதிச்சியம் நடுத்தெரு, கக்கன் தெரு, குமாரசாமி ராஜா தெரு உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் திங்கள்கிழமை டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
இப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று, தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டுள்ள தொட்டிகளை ஆட்சியர் பார்வையிட்டார்.
அப்போது, டெங்கு கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்ட 6 வீடுகளின் உரிமையாளர்களுக்குத் தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.