மதுரை

மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மறியல்: 130 பேர் கைது

DIN

பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.
       மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்வது,  ஒப்புக் கொண்ட தினக்கூலி ரூ.380 வழங்குவது, ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ.புதூரில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.        மின்வாரிய ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மதுரைத் திட்ட தலைவர் ஏ.வீரணன் தலைமை வகித்தார். சிஐடியு மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் கே.அரவிந்தன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்.நன்மாறன் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் பங்கேற்று வாழ்த்திப் பேசினர்.
    மறியலில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர்கள் 130 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT