மதுரை

திருநகரில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

DIN

மதுரை திருநகர் பகுதியில் தொடர்மழை காரணமாக அப்பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 
கஜா புயல் காரணமாக மதுரை திருநகர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் மாலை வரை மழை பெய்து வந்தது. திருநகர் மீனாட்சி தெருப்பகுதியில் உள்ள வேப்ப மரம் வேருடன் சாலையில் சாய்ந்தது. இதனால் அப்பகுதி வழியாக சென்ற மின் கம்பிளும் அறுந்து விழுந்தன. மரம் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. 
உடனடியாக மாநகராட்சி உதவிப் பொறியாளர் முருகன் தலைமையிலான மாநகராட்சி பணியாளர்கள் வந்து மரத்தை அகற்றினர். மேலும் மின்வாரியத் துறையினர் கொட்டும் மழையில் மின் இணைப்பை சரிசெய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT