அதிக மின் அழுத்தம் வீடுகளில் மின்சாதன பொருள்கள் சேதம்
திருநகரில் அதிக மின் அழுத்தம் காரணமாக, 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் சனிக்கிழமை எரிந்து சேதமடைந்தன.
திருநகரில் அதிக மின் அழுத்தம் காரணமாக, 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் சனிக்கிழமை எரிந்து சேதமடைந்தன.
மதுரை மாநகராட்சி 98 ஆவது வார்டு திருநகர் மாணிக்க நகரில் சனிக்கிழமை மாலை திடீரென உயர்அழுத்த மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியது. இதனால் அதிக மின் அழுத்தம் காரணமாக, அப்பகுதியில் இருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த புகாரின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரியத் துறையினர், மின் பழுதை சரிசெய்தனர்.