மதுரை

சேடப்பட்டி அருகே 10 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட இருவர் கைது

DIN

மதுரை மாவட்டம் சேடப்பட்டி அருகே 10 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பெண் உள்பட இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    சேடப்பட்டி அருகே உள்ள பெரிய கட்டளை மயானப் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக சேடப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் அப்பகுதிக்கு சென்றனர். அப்போது அவ்வழியாக சென்ற மூவர் போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓடினர். போலீஸார் விரட்டிச்சென்று சியாமளா(22) என்ற பெண்ணை பிடித்து சோதனையிட்டனர். இதில் அவர் 8 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர். தப்பிச்சென்ற செல்வி(48), மணி(45) ஆகியஇருவரையும் தேடி வருகின்றனர்.  இதே போல சின்னக்கட்டளை மேலத்தெருவில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த சிவசாமியை(51) போலீஸார் கைது செய்து அவரிடம் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT