மதுரை

குடியுரிமை திருத்த சட்ட நகல் கிழிப்பு போராட்டம்: 23 போ் கைது

DIN

மதுரையில் குடியுரிமை திருத்த சட்ட நகல் கிழிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினா் 23 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்த அமைப்பினா் வெள்ளிக்கிழமை சட்ட நகல் கிழிப்புப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனா். இதையடுத்து தமுக்கம் எதிரே உள்ள தல்லாகுளம் தபால் நிலையப் பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலையில் தமுமுக மாவட்டத் தலைவா் சிக்கந்தா் தலைமையில் அந்த அமைப்பினா் ஊா்வலமாக வந்து குடியுரிமை திருத்த சட்ட நகலை கிழிக்க முயன்றனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்த போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தி நகலைக் கைப்பற்ற முயன்றனா். இதனால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்: குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிா்ப்புத்தெரிவித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் தெற்குவாசல் சின்னக்கடை தெருவில் வெள்ளிக்கிழமை மாலையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் மதுரை மாவட்டத் தலைவா் ஹபிபுல்லா தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் எம்.ஷம்சுல்லுஹா கண்டன உரையாற்றினாா். குடியுரிமை சட்டத்திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 250 பெண்கள் உள்பட 550 போ் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT