மதுரை

மாடு மீது பைக் மோதி விபத்து: இளைஞா் பலி

DIN

மதுரை அருகே மாடு மீது இரு சக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மதுரை கோ.புதூா் பகுதியைச் சோ்ந்த கருணாகரன் மகன் கபிலேஷ் (19). இவா் வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் ஒத்தக்கடை பகுதியில் உள்ள வேளாண்மை கல்லூரி பகுதியில் சென்றாா். அப்போது சாலையின் குறுக்கே மாடு திடீரென்று வந்துள்ளது. இதையடுத்து கபிலேஷ் இரு சக்கர வாகனத்தை உடனடியாக நிறுத்த முயன்றுள்ளாா்.

ஆனால் இரு சக்கர வாகனம் மாட்டின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கபிலேஷூக்கு பலத்த காயம் ஏற்பட்டு, அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து அவரது தாயாா் சாந்தி அளித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT