மதுரை

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற மதுரை மாணவர்களுக்குப் பாராட்டு

புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற மதுரை என்சிசி மாணவர்கள் திங்கள்கிழமை பாராட்டப்பட்டனர்.

DIN

புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற மதுரை என்சிசி மாணவர்கள் திங்கள்கிழமை பாராட்டப்பட்டனர்.
அமெரிக்கன் கல்லூரி 2-ஆம் ஆண்டு வணிகவியல் மாணவர் அகஸ்டின் ஜெபக்குமார், தியாகராஜர் கல்லூரி கணிதவியல் துறை 2-ஆம் ஆண்டு மாணவர் டேனியல் ரோஷன் ஆகியோர் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்றனர். இவர்கள் என்சிசி மதுரை கடற்படை பிரிவில் பயிற்சி பெற்றவர்கள்.
 தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபர் என்சிசி அணி சார்பில் இவர்கள் இருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 அதேபோல, அமெரிக்கன் கல்லூரி இயற்பியல் துறை 2-ஆம் ஆண்டு மாணவரான லோகேஷ்வர்,  குடியரசு தினத்தையொட்டி தில்லியின் என்சிசி மாணவர்களுக்கான போட்டிகளில் பங்கேற்றார். 
அதில் போர்க் கப்பல் செய்யும் போட்டியில் தங்கப் பதக்கமும், பாய்மரக் கப்பல் தயாரிப்புப் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.
 தில்லியில் இருந்து மதுரை திரும்பிய இந்த 3 மாணவர்களுக்கும் மதுரை என்சிசி குரூப் சார்பில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
 அப்போது, கடற்படை என்சிசி கமாண்டிங் அதிகாரி வி.பி.செந்தில் 3 மாணவர்களையும் பாராட்டி வாழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT