மதுரை

16 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

DIN

உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் 16 கிலோ கஞ்சா மற்றும் ரூ.1.32 லட்சம் ரொக்கம் ஆகியவைகளை பறிமுதல் செய்து 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 
உசிலம்பட்டி அருகேயுள்ள நடுப்பட்டி பகுதியில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ் வழியாக வந்த 3 இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களை வழிமறித்து சோதனை செய்ததில் அவர்களிடம்  16 கிலோ 200 கிராம் கஞ்சா, மற்றும் ரூ.1,32,500 ரொக்கம், ஆகியவை இருந்தது தெரியவந்தது.  
அவர்களிடம் செய்த விசாரணையில், நல்லமாபட்டியைச் சேர்ந்த ஆதிசிவனாண்டி மகன் சேகர், கீரிபட்டி காமாயி என்ற காந்தமாள், இதே ஊரைச் சேர்ந்த காசிமாயன் மகன் முருகன், கொக்குளத்தைச் சேர்ந்த முத்துக்காளை மகன் ராமராஜ், ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா, பணம், 3 இரு சக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் மேலும் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT