மதுரை

உசிலம்பட்டி அருகே பைக் மீது கார் மோதி முதியவர் சாவு

DIN

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
 உசிலம்பட்டி அருகே ஆரியப்பட்டியை சேர்ந்த வீரணத்தேவர் மகன் பெருமாள் தேவர் (65). இவர் உசிலம்பட்டியிருந்து இரு சக்கர வாகனத்தில்  ஆரியப்பட்டிக்கு மதுரை பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார்.
 அப்போது, ஆரியப்பட்டி விலக்கு அருகே தேனியிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் இரு சக்கர வாகனத்தின் பின்புறம் மோதியது. இதில் நிலைத் தடுமாறி கீழே விழுந்த பெருமாள்தேவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இது குறித்து உசிலம்பட்டி தாலுகா காவல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT