முகப்பு
மதுரை

கிரானைட் முறைகேடு வழக்குகள் விசாரணை மார்ச்க்கு ஒத்திவைப்பு

மதுரை மாவட்டத்தில் சட்டவிரோத கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்குகள் விசாரணையை வரும் மார்ச்

Updated On : 24 ஜனவரி 2019, 2:40 am IST
பகிர்:

மதுரை மாவட்டத்தில் சட்டவிரோத கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்குகள் விசாரணையை வரும் மார்ச் மாதத்துக்கு ஒத்திவைத்து மேலூர் நீதித்துறை நடுவர் மன்றம் புதன்கழமை உத்தரவிட்டது.
மேலூர் வட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், பாசன கண்மாய்கள், ஊருணிகள் தமழ்நாடு கனிமவள நிறுவனத்தின் மலைப்பகுதிகளில் சட்டவிரோதமாக கிரானைட் வெட்டிக் கடத்தியது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், மேலூர் நீதித்துறை நடுவர்மன்றத்தில் 178 வழக்குகள் தாக்கல்செய்துள்ளார். அதில் 25 வழக்குகள் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன.
இதில், கீழையூர் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கிவைத்துள்ள பலகோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் குறித்து கிராமநிர்வாக அலுவலர் அழகுபாண்டி சாட்சியமளித்தார். கிரானைட் முறைகேடுகளுக்கான அரசு சிறப்பு வழக்குஞர் ஷீலா ஆஜரானார். அதைத்தொடர்ந்து இந்த வழக்குகளின் விசாரணையை வரும் மார்ச் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவர் பழனிவேலு உத்தரவிட்டார்.
கிரானைட் முறைகேடு தொடர்பாக போலீஸார் தொடர்ந்துள்ள 21 வழக்குகளும் விசாரணைக்கு வந்தன. இந்த வழக்கு விசாரணையின்போது, முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி ஆஜரானார். ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் மீதான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரைதயாநிதி ஆஜராகவில்லை. அவருக்கு சம்மன் சமர்ப்பிக்கப்படவில்லை என நீதிஅதையடுத்து, வழக்கு விசாரணையை மார்ச் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.